தெய்வ வழிபாடும், சாதியும், வர்க்கமும்- 2

     திருநெல்வேலி மாவட்டம் புதுக்குறிச்சி ஊரில் உள்ள ஐயனார் கோவிலைப் பற்றி கடந்த பாகத்தில் பார்த்தோம். தமிழ்நாட்டில் பெரும்பான்மையான கிராமங்களில் சாத்தா (சாஸ்தா) மற்றும் ஐயனார் எனவும் அழைக்கப்படுகிற பெருந்தெய்வம் ஒரு ஆசான் ஆவார். வைதீக மதங்களின் வருகைக்கு முற்பட்ட காலத்தில் ஆசீவகம் எனும் சமயம் பரவலாக இருந்தது. ஆசு+ஈவு+அகம் = ஆசீவகம் என்ற இந்த சமயம் பல்வேறு ஆசிரியர்களைக் (ஐயன்) கொண்டது. தமிழர்களின் மரபு வழிவந்த அணு மற்றும்  ஊழ் கோட்பாட்டின் மீது நம்பிக்கை வைத்து அதை பரப்பிய சமயம் ஆசீவகம். (பேரா.ரவிந்திரன், 2022)

                                  

      ஆசீவகத்தை நிறுவிய ஐயன் ’மற்கலி கோசாலர் தான் ஐயனார் மற்றும்  ஐயப்பன் என பேரா..நெடுஞ்செழியன் தனது ’ஆசீவகமும் ஐயனார்   வரலாறும் புத்தகத்தில்   வலியுறுத்துகிறார்இந்த மற்கலி கோசாலர் எனும் ஐயன், புத்தர் மற்றும்   மகாவீரர் கால கட்டமான சுமார் கி.மு 6 ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஆவார். இந்த சமயத்தின் ஆசிரியர்களில் ஒருவரான பூரண ஐயன் தான் இன்று திருநெல்வேலியின் பொதிகை மலையில் இருக்கும் சொரிமுத்து ஐயன் என முனைவர் ஆசீவக சுடரொளி ஊடக நேர்காணலில் கூறுகிறார். மேலும், தமிழ்நாட்டில் கையில் அரிவாளுடனும் பெரிய மீசையுடனும் தோற்றமளிக்கும் ஐயனார் கூட வெறி அரசியலுக்காக மாற்றப்பட்ட ஆசீவக ஐயன் தான் எனக் கூறுகிறார்

வைதீக மதங்களின் வருகைக்கு பின்னர் தமிழ்நாட்டில் வளர்ந்திருந்த ஆசீவகம், சமணம், பெளத்தம் ஆகிய சமயங்கள் தாக்கத்திற்கு உள்ளானது வரலாறு. ஏனென்றால், இந்த சமயங்கள் வைதீக புராண கதைகளுக்கும், ஆகம விதிகளுக்கும் உட்படாதது. வைதீக மதங்களின் சாதிய, வர்ணாசிரம கொள்கைகளுக்கு எதிரானது. நாட்டார் வழிபாட்டு முறைகளுடனும், எளிய மக்களின் உற்பத்தி சார்ந்த பண்பாட்டுடனும் கலந்து நிற்கிறது. வைதீக மதங்கள் ஆட்சியாளர்களின் உதவியோடு இந்த சமயங்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது. சைவமும், வைணவமும் வைதீக, ஆகம விதிகளுடன் சமரசம் செய்து கொண்டதால் ஆட்சியாளர்களின் உதவியோடு வளர்ந்தது. ஆட்சியாளர்களின் செல்வக் குவிப்பின் பொருட்டு சைவ, வைணவ கோவில்கள் பெருங்கோவில்களாக கட்டியெழுப்பப்பட்டன. சமண, பெளத்த கோவில்கள் வைதீக மதங்களின் தாக்கத்தால் மறைந்தாலும், ஆங்காங்கே அதன் எச்சங்கள் மட்டும் இருக்கின்றன. இதில், ஆசீவக ஐயனார் கோவில்கள் அதன் தொல்லெச்சங்களைத் தக்கவைத்துக் கொண்டு எளிய மக்களின் பொருளாதார நிலையைப் பொருத்து காலத்திற்கேற்ப மாறிக்கொண்டிருக்கிறது.

 இரத்தப் பலி பெறாத தெய்வங்களை நாட்டுப்புறத்து வழக்கு மரபில் சுத்தமுக தெய்வம் என்று கூறுவர். (பண்பாட்டு அசைவுகள் என்னும் நூலில் தொ. பரமசிவன் கூறியது)

  பல தெய்வங்கள் வரிசையாக அமைந்த கோவில்களில் ஐயனார் நடுவே இருப்பார். அவருக்கு தென் மாவட்டத்தில் பெரும்பான்மையான கோவில்களில் சைவ படையல் தான் வைக்கப்படுகிறது. இந்த ஐயனார் சிலைகள் தற்போது பல கோவில்களில் பூணூலுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறதுஅவருக்குபூணூல் அணிந்த வேளாளர்கள்   தினப்பூசையுடன் சமஸ்கிருதத்தில் மந்திரங்களை ஓதுகின்றனர்.    திருநெல்வேலி மாவட்டம் புதுக்குறிச்சியில் யாதவ சாதியினருக்கு சொந்தமான சென்னோல போத்தி ஐயனாரின் சிலை கருவூலத்தில் கறுப்பு நிறத்தில் இருக்கிறது.  ஆனால்கருவறைக்கு வெளியில் முகப்பில் உள்ள பிற்கால மண்டப சிற்பம் வெள்ளை நிறத்திலும், பூணூலுடனும் இருக்கிறதுகோவில் கொடைவிழாவின் போது கருவறையில் ஐயனார் கற்சிலையின் மேல்,வெள்ளை மாவை வைத்து மேற்பூச்சு செய்து,வெள்ளை நிறத்திலும் பூணூலுடனும்   வடிவமைக்கப்படுகிறது. இங்கு குறிப்பிட்ட சாதியர்கள் மட்டுமே பூணூல் அணிவதும் நாம் கவனிக்க வேண்டியது.



மேலும், ஐயனார், பிள்ளையார், தளவாய் மாடன், மாடத்திக்கும் சைவ உணவை படையலிட்டு பூணூல் அணிந்த வேளாளர்கள் பூஜை செய்கின்றனர். ஆனால், இத்தெய்வங்கள் உள்ள வளாகத்திற்கு முன்னே கொடைவிழா நாளன்று ஆடு ஒன்று பலியிடப்படுவது குறித்தான தகவலை கடந்த பாகத்தில் இக்கட்டுரையாளர் தெரிவித்திருந்தார். கோவிலுக்கு வெளியே உள்ள சுடலைமாடன் மற்றும் பிற தெய்வங்களுக்கு அசைவ படையல் இடுகின்றனர். சுடலைமாடன் எவரும் காணும், தொடும் விதமாகu அறையின்றி நடுகல்லில் கருப்பு நிற முகத்துடன் தோற்றமளிக்கிறார். அசைவ உணவுப் படையல்  இடப்படும் சுடலைமாடனுக்கு பூணூல் அணிந்த வேளாளர்கள் பூசை செய்வதும், கொடைவிழாவின் போது அவரை வெள்ளை நிறத்தில் மேற்பூச்சு செய்து உருவம் பிடிப்பதும் முரண்பாடாகும்.

    பலியிடும் வழக்கம் நிலவுடைமை சமுதாயத்தில் நிலவிய சண்டைகள்  அல்லது போரின் போது, வெற்றி பெற வேண்டி தெய்வத்திற்கு விலங்குகள் அல்லது பறவைகளை வெட்டி இரத்த பலி செலுத்துவதாகும். இந்த இரத்தத்தை தெய்வத்திற்கு அளிப்பதின் மூலம் தமக்கு வெற்றி கைகூடும் என்பது அவர்களின் நம்பிக்கை. அந்த வழக்கம் தான் இன்றும் சிறு தெய்வக் கோவில்களில் தாம் நினைத்த காரியம் வெற்றியடைய வேண்டி இரத்த பலி செலுத்தி வருகின்றனர். அவ்வாறு விளைபொருட்கள் அல்லது மக்களை எதிரிகளிடமிருந்து காப்பதற்காக சண்டைக்கு சென்று உயிர்நீத்த ஆண்கள்  ஊர் எல்லைகளிலும், கண்மாய் ஓரங்களிலும், புன்செய் காடுகளிலும் தெய்வங்களாக நின்றபடி கோவில் கொண்டுள்ளது. சுடலைமாடன் ,தளவாய் மாடன், தூசி மாடன், காத்தவராயன், கருப்பசாமி, முண்ட சாமி, மதுரை வீரன் போன்ற ஆண் தெய்வங்கள் "காவல் தெய்வங்கள்" என அழைக்கப்படுகிறது.





Comments

Post a Comment

Popular posts from this blog

தெய்வ வழிபாடும் சாதியும் வர்க்கமும் - 4

kaniyan poongundranar's poem - கணியன் பூங்குன்றனாரின் பாடல்

தெய்வ வழிபாடும், சாதியும் வர்க்கமும் - 1