Posts

Showing posts from February, 2022

தாரை தப்பட்டை- திரைப்பட விமர்சனம்

Image
 வணக்கம் நேயர்களே !  இந்த படத்தை இப்பதான் பார்த்தீங்களா அப்படின்னு கேக்குறீங்க தானே ?   ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு பார்த்த பிடிக்காமல் போன படமாக இருந்தாலும்... இன்னொரு கோணத்திலிருந்து பார்க்க தொடங்கினேன்...  பாரம்பரியக் கலைகளின் அழிவும், மக்களின் விருப்பமும் எவ்வாறு இருக்கிறது என்பதை ஒரு அருமையான ஒரு உரையாடலாக இயக்குனர் பாலா தந்துள்ளார். அதில் முக்கியமான பிடித்த காட்சிகளை பார்ப்போம்.  ஜோதிட நம்பிக்கைகளில் ஊறிப்போன சமுதாயத்தின் பார்வைக்கு பெரிய மனுஷனாக தெரியும் பணக்கார கதாபாத்திரம் ஒன்று. இந்த கதாபாத்திரம் நடத்தும் கேவலமான செயலின் மூலம் தனது சமூக மதிப்பை நிலைநாட்டுகிறார். அந்த கதாபாத்திரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. பெண்களின் நலனுக்கு என்று அவர்களுக்கு பிடிக்காத ஒருவரை, முன்பின் தெரியாத ஒரு நபரை நம்பி திருமணம் செய்து வைப்பது எவ்வகையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை படம் காட்டுகிறது.வரலட்சுமியின் கதாபாத்திரம் ஒரு வெள்ளந்தியான ஏமாந்து போகிற கொஞ்சம் அடாவடியான கதாபாத்திரமாக இருக்கிறது. வரலட்சுமியின் நடிப்பு தாறுமாறு.🔥 சசிகுமாரின் நடிப்பு கொஞ்சம் இ...

சத்சங்கம் - புத்தக விமர்சனம்

Image
  நேயர்களே! இன்னைக்கு நாம பார்க்கப் போறது சத்சங்கம் - வெ.இறையன்பு அய்யா எழுதின புத்தகத்தை பற்றி தான். இந்தப் புத்தகமானது ஆத்திகத்துக்கும் நாத்திகத்திற்கு மான உரையாடலாகவும், விளக்க உரைகளாகவும் இருக்கின்றன. அதுபோக ஆன்மீகத்தைப் பற்றிய சரியான புரிதலும், குடும்ப சமுதாய அமைப்பில் பேரன்பு மலர செய்ய வேண்டியவைகளும் இருக்கின்றன. சுயதரிசன, சுய விமர்சன, சுயமுன்னேற்ற கலன்களை இயல்பாக தொட்டு விட்டு கடந்து செல்ல இந்த நூல் திசை காட்டுகிறது.  நாத்திகத்திற்கு ஆன்மிகத்திற்கும் தொடர்பு இல்லையா? என்கிற பல கேள்விகளை இனங்கண்டு அதற்கான தேடலை உருவாக்க வழிவகை செய்கிறது இந்த புத்தகம். சில அத்தியாயங்களில் சில கருத்துக்கள் சலிப்பூட்டுபவையாக இருந்தாலும், பல நல்ல கருத்துக்களும் தெளிவுகளும் இதில் இருக்கின்றன. வாசிப்பை நேசிப்போமாக ... இதைப்போன்ற அடுத்த விமர்சனத்தில் உங்களை சந்திக்கிறேன்...                         நன்றி! வணக்கம்.

மகான் - திரை பட விமர்சனம்

Image
 எந்த எதிர்பார்ப்பும் இல்லாம தான் படத்தை பார்க்க போனேன்.இந்த படம் பிடிச்சி இருக்கா, பிடிக்கலையானு சொல்ல முடியல ஆனா இது ஒரு சராசரியான பொழுதுபோக்கான படம் .  பாபி சிம்ஹா இப்படி நடிப்பாரானு இந்த படத்தின் மூலமாக தான் தெரிந்தது. அவர் பன்ன படங்களில் இது அவருக்கு பெயர் சொல்லும் படி என்றும் இருக்கும். விக்ரம் சொல்ல வேண்டுமா எந்த பாத்திரத்தில் ஊற்றினாலும் அதுவாக மாறும் திறமையுடையவர். அவரை விட துருவ் அவரோட கதாபாத்திரத்திற்கு ஆழமான நடிப்பை தந்து இருக்கிறார்.   படத்தின் நீளம் பொறுமைய கட்டாயம் சோதிக்கிறது. அதற்கு காரணம் முதல் பாதியில் எந்தவொரு காட்சியும் அழுத்தம் இல்லாமல் ஏதோ போகிறது. படத்தின் பலம் கடைசி 40 நிமிடங்கள் தான். அப்பா, மகன் ஆடும் ஆட்டம் நன்றாகவே இருந்தது. என்னை பொறுத்த வரையில் மொத்த படத்தில் புதுசா நல்லா இருந்தது அப்படினா பாபி சிம்ஹா & துருவ் நடிப்பு தான். படத்தின் மிகப்பெரிய குறை மேக்கப். அதுவும் சிம்ரனுக்கு இரண்டாம் பாதியில் போடப்பட்ட மேக்கப்பா இருக்கடும், தலையில் விக் இதெல்லாம் பார்க்கும்படியாக  இல்லை.  "தப்பு செய்ய கூட சுதந்திரம் இல்லைன்னா அது சுதந்தி...

ஏழு தலைமுறைகள் - புத்தக விமர்சனம்

Image
அன்பார்ந்த நேயர்களே! இந்தப் பதிவுல ஏழு தலைமுறைகள் நாவல் புத்தகத்தை பத்தி பாக்க போறோம்.  "வெள்ளையர்கள் கொடுப்பவர்களாகவும் கருப்பர்கள் பெற்றுக் கொள்பவர்களாகவும் இருக்கும் நிலைமை ஒளிந்து இருவரும் சம பங்காளிகளாக இருக்கும் அமைப்புக்காக அமெரிக்க கருப்பின போராடிக் கொண்டிருக்கிறது." கறுப்பினத் தலைவர் பிரெடரிக் டக்ளஸ் 1857 ஆம் ஆண்டில் ஆகஸ்டில் கூறிய சொற்களை அமெரிக்க கருப்பர்கள் இன்றும் நினைவு கூறுகிறார்கள். இப்போராட்ட எதிரொலிகள் அலெக்ஸ் ஹேலியின் "ஏழு தலைமுறைகள்" எனும் இந்நாவலில் அடிமை சேரிகளில் பலமுறை கேட்கின்றன. 1852 ஆம் ஆண்டில் வெளிவந்த அங்கிள் டாம்ஸ் கேபின் நாவலுக்குப் பிறகு கடந்த 120 வருட நீண்ட காலத்தில் உலகத்தையே குலுக்கிய இதுபோன்ற புத்தகம் வேறு எதுவும் வந்ததில்லை. இது இரண்டு கண்டங்களின் இரு இனத்தவர்கள் இரண்டு நூற்றாண்டுகளில் நடந்த எதார்த்தமான வேதனை நிறைந்த வரலாற்று கதை! ஆப்பிரிக்கா என்றால் இருண்ட கண்டம். அங்குள்ள மக்கள் மிருகங்கள் இடையே நடமாடும் காட்டுமிராண்டிகள்! அவர்கள் நாகரீகமும் கலாச்சாரமும் வரலாறும் இல்லாதவர்கள். அமெரிக்கா சுதந்திரத்தின் சொர்க்கம். வீரசாகசமிக்கோர...

மண்டேலா - திரைப்பட விமர்சனம்

Image
   வணக்கம் நேயர்களே!  இன்னைக்கு நாம மண்டேலா படத்த பத்தி பாக்க போறோம். இந்த படம் நெட்பிளிக்ஸ்ல கடந்த வருட சட்டமன்ற தேர்தலுக்கு முன்னால் வெளியாகிவிட்டது. ஆனா இவ்வளவு நாள் கழிச்சு இதைப்பற்றிய ஏன் பேசணும்? அப்படின்னு கேட்டீங்கன்னா, அடுத்து "நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்" வரப்போகுது. அதுக்கு முன்னால இந்த படம் பார்த்தா நல்லா இருக்கும்னு தோணிச்சி.  தமிழ் சினிமாவில் தேர்தலை மையமாக வைத்து நிறைய படம் வந்திருக்கு. ஆனா இந்த படம் ஒரு வித்தியாசமான கதைக்களமாக இருக்கு. என்னன்னு கேட்டீங்கன்னா? ஒரு ஓட்டு எவ்வளவு முக்கியம். அந்த ஓட்டுக்காக வேட்பாளர்கள் என்னவெல்லாம் செய்வார்கள். அப்படிங்கிறத நகைச்சுவை கலந்த ஒரு படைப்பாக அறிமுக இயக்குனர் அஸ்வின் கொடுத்திருக்காரு. பொதுவா சாதிய அமைப்புகளை வச்சு ஒரு படம் எடுக்கிறதுங்கறது கத்தி மேல நடக்கிற மாதிரி. ஆனால் அந்த முயற்சியில் இயக்குனர் அழகா ஜெயித்துவிட்டார். ஏன் சொல்றேன்னா இரண்டு ஜாதி அமைப்புகளுக்கு உள்ளே நடக்கிற மோதலை வடக்கூர், தெற்கூர் அப்படின்னு சொல்லி ரொம்ப நாசுக்கா முடிச்சிட்டார்.  கதையை பத்தி பேசுவோம். சூரங்குடி என்ற கிராமத்தில் ஒரு தாழ்த...