Posts

Showing posts from January, 2023

பத்மநாபா படுகொலை - ஜெ. ராம்கி

Image
பத்மநாபா படுகொலை எழுதியவர் - ஜெ. ராம்கி பக்கங்கள் - 136 சுவாசம் பதிப்பகம்  விலை - 160 ரூ  இது ஒரு சுவாரசியம் நிறைந்த ஒரு உண்மை வரலாறு. இதற்கு முன்னர் தமிழ்நாட்டில் இப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்குமா என கற்பனை கூட செய்து கொள்ள முடியாது.  ஆனால் 1990களில் நடந்த இச்சம்பவம் தமிழ்நாட்டையே உளுக்கியது. மேலும், தமிழ்நாட்டின் அரசியல் போக்கையே மாற்றி போட்டது என்றாலும் மிகையாகாது. இந்த புத்தகத்தை படிப்பதற்கு முன் பத்மநாபாவைப் பற்றி எனக்கு அறிமுகமே கிடையாது. இதைப் படித்த பின்பு இப்படி ஒரு வரலாற்று நிகழ்வை எப்படி காட்சியாக ஆவணப்படுத்தாமல், பெரிதாக பேசாமல் இருந்தார்கள் எனக் கவலையாக இருந்தது. ஏனென்றால் நமக்குத் தெரிந்த தமிழ்நாடு அரசியலைத் தாண்டி புது பார்வையைத் தருகிறது. இனி அந்நிகழ்வு எவ்வாறு நடந்தது எனப் சுருக்கமாக பார்க்கலாம். ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்காக குரல் கொடுத்த பத்மநாபா படுகொலை செய்யப்பட்ட கதை. பத்மநாபா ஈழத்த தமிழர் விடுதலைக்காக ஆயுதங்களை ஏந்தி முதலில் போராடினாலும், பிற்காலத்தில் அவருக்கு கிடைத்த உலகளாவிய அரசியல் புரிதல்களினால் ஜனநாயக முறையை தேர்ந்தெடுத்தார். இதன் மூலமாக ஏற...

சென்னையில் ஒரு சம்பவம்

Image
  இன்னைக்கு சாயங்காலம் சென்னை அசோக் நகர் பக்கத்துல நடந்து வந்துட்டு இருக்குறப்ப ஒரு சம்பவம் நடந்துகிட்டு இருந்தது. சரி என்னடா நடக்குதுன்னு நின்னு பார்ப்போம் என கவனிச்சேன். கடவுள் பெயரை சொல்லி காசு கொடுத்து ஏமாந்து போன ஒரு தம்பதி நின்னுட்டு இருந்தாங்க. அந்த பக்கம் ஒரு குறி சொல்ற பெண் நின்னுகிட்டு இருந்தாங்க.  இந்த குறி சொல்ற பெண் அவங்க கிட்ட ஏதேதோ சொல்லி 2000 ரூபாய் வாங்கிட்டு பட்ட நாமத்த போட்டுட்டாங்க. காச இழந்த இந்த தம்பதி அதை எப்படிடா வாங்குவது என்று வாதாடிட்டு இருக்காங்க. ஒரு கட்டத்துல காச இழந்த அந்த ஆண் அவர் வைத்திருந்த நாக உருவ சிலையை எடுத்துக்கிட்டு வந்தாரு. உடனே அந்த குறி சொல்ற பெண் இதை எடுத்துக்கிட்டு போனா, 'அதுக்கு தகுந்த மாதிரி அனுபவிப்ப அப்படின்னு சொல்லுது'. நான் அனுபவிச்சா அனுபவிச்சிட்டு போறேன். ஆனா காசு இழந்தவர் மனைவி எதுக்கு நமக்கு இது, அதை போட்டுட்டு வந்துருங்க அப்படின்னு சொல்லுறாங்க. அவங்களுக்குள்ளே ஒரு சின்ன கடவுள் பயம் எட்டிப் பார்க்கிறத கவனிச்சேன்.  அந்த நாக சிலையை திருப்பி போட்டுட்டு நீ நாசமா போய்டுவ உன் குடும்பமே விளங்காமல் போய்விடும் அப்படி இப்படின்ன...

பூப்பு - மாதவிடாய் சந்தேகங்களும் விளக்கங்களும்

Image
  பூப்பு  மாதவிடாய் சந்தேகங்களும் விளக்கங்களும் எழுதியவர் - ரேணுகா தேவி பக்கங்கள் - 48 இந்த புத்தகம் மாதவிலக்கு சம்பந்தமான கேள்விகளுக்கு விளக்கங்களையும் மருத்துவ ஆலோசனைகளையும் தருவதாக இருக்கிறது. முதலில் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தற்காக ஆசிரியருக்கும் படைப்பிற்கும் வரவேற்பை அளிக்க வேண்டும்.  இது பெண்கள் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் என எழுதியிருந்தது. ஆனால், இதை அனைத்து பாலினத்தாரும் வாசிக்க வேண்டியற்றுள் ஒன்று. புத்தகத்தைப் பற்றிய விமர்சனத்தை இக்குழுவில் பார்த்தேன். வெகு நாட்களுக்கு முன்பாகவே இதை வாசிக்கனும்னு ரொம்ப ஆர்வமாக இருந்தது.  அதில் மத்திய பிரதேசத்தில் மாதவிடாய் தொடர்பாக பாரம்பரிய வழக்கத்தை கடைபிடி ப்பதாக எழுதியிருந்தார். மேலும் அது எனது ஊரிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அது என்னவென்றால் பெண்கள் மாதவிலக்கு நாட்களில் தீண்ட தகாதவர்களாக நடத்தப்படுவது. என் சகோதரிகளையே அவ்வாறு நடத்துவதை நான் பார்க்கிறேன். தனித்தட்டில் சாப்பிட சொல்வது, தனியாக உறங்கச் சொல்வது, பிறரை தொடக்கூடாது இன்னும் பல இத்யாதிகள் உண்டு. ஆக இதை வழக்கம் என சொல்வதை விட மூடநம்பிக்கைகளால் கெட்டி ...