Posts

Showing posts from August, 2022

நட்சத்திரம் நகர்கிறது - திரைப்பட விமர்சனம்

Image
இந்தப் படம் நான் எதிர்பார்த்ததை போலவே commercial சினிமாவாக இல்லாமல் content பேசும் படமாக இருந்தது. இந்தப் படம்  சமூக சீர்கேடுகளை அதன் அக்கு வேறு ஆணிவேராக ஒவ்வொன்றையும் உரையாடல் படுத்தி இருப்பார் இயக்குனர். இது மிகவும் வரவேற்கத்தக்கது.  காதலில் ஒரு படிப்பினையும், பயணத்தையும் உருவாக்குகிறது.சமூகத்தின் அனைத்து தரப்பு பார்வையாளர்களுக்கிடையே உரையாடலை உருவாக்குகிறது. இப்படம் திருவாரூரில் முதல் நாள் முதல் காட்சி 11:00 மணிக்கே கிடைத்தது. இயக்குனர் Pa.Ranjith அவர்களுக்கும் படக் குழுவினருக்கும் (Yaazhi Films) பேரன்புகளும் வாழ்த்துக்களும். பெரும்பாலானோர் படம் மெதுவாக போவதாக சொல்கிறார்கள். ஆனால் நான் ஒவ்வொரு காட்சியும் முக்கியம் என நினைக்கிறேன். விமர்சனம் தனிபட்டது என்பதால் எளிதாக எடுத்துக்கொள்ளலாம். அதுவும் படைப்புக்கு நலன் தரக் கூடியது தானே..  ஒரு 50 - 60 வயதுக்குள் இருப்பவர்களின் விமர்சனம் பற்றி அறிய ஆவலாக இருக்கிறது. கமர்ஷியல் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாக்கப்படுமா எனில் கேள்விக்குறிதான். அதைபோல இவர்களின் விமர்சனம் ஒன்றில் " படம் இன்னும் நல்லா எடுத்துறுக்கலாம் என சொன்...

புத்தக விமர்சனம் - சினிமா ஒரு காட்சி இலக்கியம்

Image
சினிமா ஒரு காட்சி இலக்கியம்  எழுத்தாளர் - ம.தொல்காப்பியன்  பக்கங்கள் - 127 சினிமாவை பற்றிய எதிர்மறைக் கருத்துகளை கொண்டவர்களும், சினிமாவை ரசிப்பவர்களும் தங்கள் கருத்துகளை வலுப்படுத்திக் கொள்ள கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம் என நினைக்கிறேன். சினிமா ஒரு பொழுது போக்கு அல்ல. அது மக்களை பண்படுத்தும் ஒரு காட்சி இலக்கியம் என்பது இதனுடைய மையக்கருத்து.  மொழியின் ஆதார வடிவமான கூத்திலிருந்து நாடகம் பிறந்தது, அந்த நாடகம் அறிவியல் உபகரணங்களோடு புணர்ந்து பெற்றெடுத்த நட்சத்திர குழந்தைதான் சினிமா. எனவே சினிமாவும் மொழியின் இன்னொரு அலங்கார வடிவமே. அது போக பல சினிமாக்களின் காட்சிகளை எடுத்துரைத்து அதை அருமையாக விளக்கி இருப்பார். அதில் சில அபூர்வராகங்கள் நாயகன் ஆடுகளம் ஆகியன. ஒவ்வொரு தலைப்புகளையும் இன்னும் ஆராய்ந்து விரிவாக எழுதி அதை இன்னும் பெரிய புத்தகமாக கொடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.  சினிமாவை பற்றிய ஒரு தனித்துவமான பார்வையை கொண்டவராக இப்புத்தகத்தை எழுதியிருக்கிறார். ஒரு முறை வாசித்தாலே புரிந்துவிடும். Kindle edition Rs.100. எனக்கு பிடித்த புத்தகம் இது. இதை என் நண்பருக்...

செருப்பை தின்கிறேன்- புத்தக விமர்சனம்

Image
கவிதையாசிரியர் - அழகு ஜெகன் இந்த புத்தகத்தின் தலைப்பும் அட்டைப்படமும் எனை படிக்க ஈர்த்தது. அதுபோக புத்தகத்தின் எழுத்தாளர் முகநூலில் நண்பராக அறிமுகம் ஆகி இருந்ததும் காரணம் என கூறலாம்.  இப் புத்தகத்தின் பல இடங்களில் பெரும்பான்மையான கவிதைகள் பால் புதுமை இன மக்களின் வலிகளை உணர்த்தியது. அதோடு மட்டுமல்லாமல் பெண்ணியம், தலித்தியம் என சேர்த்து இருப்பது கூடுதல் சிறப்பு.  இபுத்தகத்தை படித்த பிறகு பால்புதுமை இன மக்களை பற்றிய புரிதல் இன்னும் ஆழமாக கிடைத்திருக்கிறது. இதோடு சேர்த்து பால்மணம் புத்தகத்தையும் படித்துக் கொண்டிருந்தேன். இச்சமுகத்திற்கும் புரிதல் கிடைக்கும் என நம்புகிறேன். இப் பொதுச்சமூகம் செய்த தீண்டாமையின் பொருட்டு அவர்களை நோக்கி கேள்விகளை  ஆணித்தரமாக கேட்டிருக்கிறார்.  படிக்கும்போது பல தருணங்களில் எனை அறியாமல் எனது கண்ணீர் விடுதலை பெற்றுக் கொண்டது. இப்புத்தகத்தில் பல கவிதைகள் எனக்கு பிடித்திருந்தது. அவற்றுள் மிக மிக பிடித்த ஒன்று இது.  🌹இளஞ்சிவப்பு ரோஜாவே என் செத்த உடல் மீது ஏன் வந்து மலர்ந்து செத்து கிடக்கிறாய் ? உன்னையும் உன் அண்ணன் ஒன்பது என்று கேலி செய்தானா ...

புத்தக விமர்சனம் - கெட்ட வார்த்தை பேசுவோம்

Image
புத்தக எழுத்தாளர் - பெருமாள் முருகன் இந்த நூலின் தலைப்பே எல்லோரையும் வாசிக்க தூண்டும். அதுபோக என் நண்பரின் whatsapp எழுத்து மூலமாக அறிமுகம் கிடைத்தது. முதல் ஐந்து பக்கங்களை படித்து கொண்டிருக்கையில் ஆர்வம் மிக அதிகமாகி விட்டது. இந்த புத்தகத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் அல்குள் என்ற வார்த்தையை வைத்து விரிவாக எழுதப்பட்டிருக்கும். (அல்குள் - பெண்ணுறுப்பு). இன்றைக்கு சமூகம் பேசக்கூடாது என சொல்கிற வார்த்தைகளை அது கெட்ட வார்த்தை அல்ல அவ்வாறு ஆக்கப்பட்டு விட்டது என தகுந்த சான்றுகளோடு விளக்கமாக கொடுத்திருக்கிறார். இந்த வார்த்தைகள் என்னவென்றால் "புண்ட ,சுன்னி, தாயோலி, தூய்மை குண்டி முலை " போன்றவை மக்கள் பயன்படுத்தியவை தான். அதாவது மனித உடலில் இருக்கும் உறுப்புகளுக்கு வைத்த பெயர்கள்தான். அவை காலப்போக்கில் புது சொற்கள் வந்த பிறகு இவைகள் நாகரீகமற்றதாகவும் கெட்ட வார்த்தை ஆகவும் ஆக்கப்பட்டது.  மேலும் கம்பராமாயணத்தில் கம்பர் சீதையை வர்ணித்தவற்றை பற்றி படிக்கும் போது மிகுந்த ஆர்வமாக இருந்தது. கம்பரை பற்றியும் அண்ணாவைப் பற்றியும் இன்னொரு பார்வை நமக்கு நிச்சயமாக கிடைக்கும். நமது தமிழ் சமூகத்...