Posts

Showing posts from July, 2024

kaniyan poongundranar's poem - கணியன் பூங்குன்றனாரின் பாடல்

  தீதும் நன்றும் பிறர்தர வாரா நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன சாதலும் புதுவது அன்றே , வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின் இன்னா தென்றலும் இலமே , மின்னொடு வானம் தண்துளி தலைஇ யானாது கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறை வழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆகலின் , மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே , சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே . யாதும் ஊரே யாவரும் கேளிர் -       கணியன்   பூங்குன்றன்  பொருள்   நன்மை தீமை மற்றவரால் வருவதில்லை துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை மரணித்தல் புதுமையில்லை ; வாழ்தல் இன்பமென்று மகிழ்ந்தது இல்லை வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை. மின்னலுடன் மழை குளிர்ந்த துளியைப் பொழிந்து பெ ரிய  ஆ ற்றில் ஓடும் படகுபோல இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று முன்னோடிகள் ஊட்டிய அறிவால் தெளிந்தோம். ஆதலினால் , சி றியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை....