Posts

Showing posts from October, 2022

சார்லி 777 - திரைப்பட விமர்சனம்

Image
  இக்கதையின் மையக்கரு இந்த அமைப்பு விதித்திருக்கும் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு தன் மனதுக்கு சரியாக பட்டதை செய்யும் மனிதனுக்கும் மனிதனால் கேடு விளைவிக்கப்பட்டு தனியாய் திரியும் நாய்க்கும் இடையேயான பேரன்பை வெளிப்படுத்துகிறது. முதலில் இப்படிப்பட்ட கதைக்களத்தை தேர்வு செய்து படமாக்கிய இயக்குனருக்கு (கிரண் ராஜ் )வாழ்த்துக்கள். பொதுவாக ஒரு விலங்கினை கொண்டு நகரும் கதைக்கு ஒரு தனி ஆர்வம் இருக்கும் அதுபோலவே இக்கதைக்கும் இருந்தது .அதை கதைக்களம் பூர்த்தியும் செய்தது. பொதுவாக கதாநாயகன் ஒரு நல்லதை செய்யும் போது அதைக் கண்டு கதாநாயகி காதல் வயப்படுவதுண்டு. இதில் அவ்வாறு செய்யாமல் இருந்தது ரசிக்கும் படியாக இருந்தது. அதை அவள் அழகாக கையாண்ட படி தன் வேலையை செய்வாள். அந்த நாயின் உணர்வுகளை கேமரா மூலம் கடத்திய ஒளிப்பதிவாளரை பாராட்டியாக வேண்டும் பின்னணி இசை கதையின் உணர்வோட்டத்திற்கு மேலும் மெருகூட்டியது. உறவுகளின் பிரிவால் இறுகிபோய் இருக்கும் ஒரு மனதிற்கு சிறு அன்பை கொடுத்தலின் மூலம் அவனை பறந்த விரிந்த பிரபஞ்சத்தின் அழகினை அனுபவிக்க செய்கிறது அந்த நாய் சார்லி. " அதே அன்பு விட்டு பிரியும் நிலை வரும் போத...

திருமண வாழ்க்கையில் ஒரு வெற்றிதிறவுகொள்

Image
மண வாழ்க்கையின் வெற்றிக்கு திறவுகோல் -கமலநாதன்  பக்கங்கள் - 210  இந்தப் புத்தகம் மிக மோசமான அனுபவத்தையே தந்தது....  இந்த புத்தகம் சினிமாவில் காமம் குறித்தான காட்சியாக்கங்களை பற்றி ஒரு வன்மம்  இருந்திருக்கிறது என்பதால் அதை எதிர்த்து பதிவிட்டு இருக்கிறார். அது காமம் மட்டுமே வாழ்க்கை என கூறுகிறதாம். காமம் குறித்தான இருட்டடிப்பை நீக்குவதற்கே அவ்வாறான காட்சியாக்கங்கள் வைக்கப்படுகிறது. மனைவி ஒரு கணவனுக்கு தாயாக இருக்க வேண்டுமாம். அவ்வாறு வைக்கப்படும் போதே அவளை புனிதப்படுத்தி ஒடுக்கிறார்கள். அவள் ஒரு கணவனை மகனைப் போல நினைத்து மன்னிக்க வேண்டுமாம். மன்னிப்பதெல்லாம் சரி.  இரண்டாவது ஆண் செய்யும் தவறுகளை சிலவற்றையே சொல்கிறார். அதில் மனைவியை அடிப்பதை பற்றியும் குடிப்பழக்கத்தையும் பற்றி பேசியிருக்கிறார்.  நிறைய மனோதத்துவ அறிஞர்கள் கூறியிருப்பதாக பல உண்மைகளை எடுத்து சொல்வதாக எழுதியிருக்கிறார்.  ஆனால் அதற்கான ஆதாரப்பூர்வமான இணைப்பு எதையும் பின் இணைக்கவில்லை.  இந்த புத்தகத்தை ஒரு பெண் அடிமைத்தனத்தை பற்றி சிந்திக்காதவர்கள் படித்தால் இதை நம்பிக் கொண்டு அப்படியே பின்...